For Daily Alerts
Just In
புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழை
சென்னை:
சென்னை அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும்அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகியிருப்பதால் தமிழகத்தின் வட பகுதிகளிலும், உட்புற தமிழகத்திலும்அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் பலத்த மழை இருக்கும்.
பகல் நேரங்களை விட இரவிலேயே அதிக அளவில் மழை இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர்மாவட்டங்களில் கடும் மழை பெய்துள்ளது என்றார்.
Comments
Story first published: Saturday, July 23, 2005, 5:30 [IST]