இராக்: தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்தியர்
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்:
இராக்கில் இந்திய தொழிலதிபரைக் கடத்த முயற்சி நடந்தது. படுகாயத்துடன் அவர் கடத்தல்காரர்களிடம் சிக்காமல்தப்பிவிட்டார்.
மேற்கு பாக்தாதில் ஜான் சிங் (37) என்ற இந்தியத் தொழிலதிபரின் அலுவலகத்துக்குள் இன்று காலை துப்பாக்கி ஏந்தியதீவிரவாதிகள் நுழைந்தனர். அவரைக் கடத்திய தீவிரவாதிகள், அலுவலகத்தில் இருந்த 1.5 லட்சம் டாலர் பணத்தையும்எடுத்துக் கொண்டனர்.
இந் நிலையில் முகத்திலும் கால்களிலும் பலத்த கத்திக் குத்துக் காயங்களுடன் ஜான் சிங் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் எப்படி கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பினார் என்று உடனடியாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications