இலங்கை: இந்திய த் தூதரின் கார் துப்பாக்கி முனையில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் இந்திய துணைத் தூதரின் குடும்பத்தினரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய இருவர் அவர்களது காரை பறித்துச்சென்றது.
துணைத் தூதரான ராஜன் பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் சமீபத்தில் வாங்கப்பட்ட டயோட்ட லேண்ட்குரூசர் காரில்கொழும்பு சென்று கொண்டிருந்தனர்.
ஒரு விடுதியின் உணவருந்திவிட்டு நெடுஞ்சாலைக்கு வந்த அவர்களது காரை இருவர் துப்பாக்கி முனையில் வழிமறித்தனர்.அந்த காரில் தூதரக நம்பர் பிளேட் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து காரை நிறுத்தினார் பிள்ளை. காரில் இருந்து அனைவரையும் வெளியேற்றிய துப்பாக்கிக் கொள்ளையர்கள் காரைஓட்டிச் சென்றுவிட்டனர்.
கண்டியில் உள்ள இந்திய துணைத் தூரகத்தில் பணியாற்றும் ராஜன் பிள்ளை கொழும்பு சென்று கொண்டிருந்தபோது இச் சம்பவம்நடந்தது.












Click it and Unblock the Notifications