சாலைகளை மேம்படுத்த ரூ. 400 கோடி: ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிப் பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த ரூ. 400 கோடியை ஒதுக்கி முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 4 வருடங்களாக சாலை அமைக்கும் பணிகள் ஏதும் பெரிய அளவில் நடக்கவில்லை. இதனால் மாநிலம்முழுவதும் சாலைகள் குண்டும், குழியுமாக காணப்படுகின்றன.

இந் நிலையில் தேர்தல் வருவதையொட்டி பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் ஜெயலலிதா, சாலை அமைக்கும்திட்டத்தையும் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

பாதுகாப்பான, வேகமான வாகனப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் சாலை கட்டமைப்பினை மேம்படுத்த முதல்வர்ஜெயலலிதா தலைமையிலான அரசு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 13,681 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் நகர்ப்பு உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

இதில் கடந்த 2001-02ம் ஆண்டு முதல் 2004-05ம் ஆண்டு வரை கடந்த நான்கு ஆண்டுகளில் 294.96 கோடி மதிப்பில் 4329கி.மீ. நீளமுள்ள சாலைகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது ரூ. 400.81 கோடி மதிப்பில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த புதிய திட்டத்தினைமுதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

நகர்ப் புறங்களில் உள்ள கல் சரள் சாலைகள், மண் சாலைகள் ஆகியவற்றை தார்ச் சாலைகளாக மாற்றவும், பேருந்து வழித்தடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், மத வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள சாலைகள், முக்கியஇணைப்புச் சாலைகள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து இச் சாலைகளை செப்பனிட்டு புதுப்பித்து மேம்படுத்த முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+