சென்னை விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சென்னை:
லண்டன் நகரில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் தீவிரவாதிகளின் தாக்குதல் காரணமாக சென்னை விமான நிலையத்தில்பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் டெல்லி, மும்பை, சென்னை உட்பட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை ஆணையாளர்நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவின்பேரில் நேற்று முதல் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் கூடுதல் போலீசார் நேற்று முதல் பாதுகாப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.விமான நிலையத்திற்குள் நுழையும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும்இடங்களில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
விமான நிலைய ஓடுபாதை மற்றும் உள் வளாக பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர்கண்காணிப்பு டவர்கள் மூலம் கவனிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications