இளங்கோவனுக்கு வாசன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம்
சென்னை:
காங்கிரஸ் கோஷ்டி மோதலின் அடுத்த கட்டமாக ஜி.கே.வாசனை மறைமுகமாக தாக்கிப் பேசிய மத்திய அமைச்சர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாசன் ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சர்ச்சையில் சிக்கியுள்ள விநாயகமூர்த்தி, வாசனுக்கு எதிரான தலைவர்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.விநாயகமூர்த்தியை வைத்து வாசனை கவிழ்க்க நினைக்கும் தலைவர்களும், விநாயகமூர்த்திக்கு ஆதரவு தெரிவித்துவாசனுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முடிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமை இளங்கோவனை விநாயகமூர்த்தி சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து பேட்டி அளித்த இளங்கோவன்சத்தியமூர்த்தி பவன் வன்முறை பவனாக மாறி வருவதாக காட்டமாக கூறினார்.
மேலும், விநாயகமூர்த்தியைத் தாக்கியவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாக இருந்துவருவதாகவும் கூறினார். இது வாசன் கோஷ்டியினருக்கு கடுப்பைக் கொடுத்துள்ளது.
இளங்கோவன் கூறியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து அகில இந்தியத் தலைமைக்கு தந்திகள் அனுப்ப முடிவுசெய்துள்ளனர். மேலும், இளங்கோவன் தொடர்ந்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியும், செயல்பட்டும்வருகிறார்.
எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமையை வலியுறுத்த அவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலையில் வாசன் கோஷ்டியினரும், இளங்கோவன்கோஷ்டியினரும் மீண்டும் குடுமிப்பிடி சண்டையை ஆரம்பித்துள்ளதால் தமிழக காங்கிரஸ் நிலை குறித்து கட்சித் தலைமைகவலை அடைந்துள்ளது.
அதேசமயம், அதிமுக தரப்பு படு குஷியாக நடப்பவற்றை அமைதியாக பார்த்துக் கொண்டு வருகிறது.












Click it and Unblock the Notifications