பேஷன் ஷோவில் ஆபாசம்: போலீஸ் கண்டிப்பு!
சென்னை:
சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் ஆபாசமாக உடை அணிந்து அழகிகள் வந்ததாக புகார் கூறப்படுவது குறித்து சென்னைமாநகர காவல்துறை ஆணையர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் சர்வதேச வர்த்தக வளாக்தில் சமீபத்தில் பெண்கள் உள்ளாடை கண்காட்சி நடந்தது. இதையொட்டிஅழகிகளின் அணிவகுப்பும் நடந்தது. இதில் மிகவும் ஆபாசமாக அழகிகள் அணிவகுத்து வந்ததாக சென்னை காவல்துறைக்குபுகார்கள் சென்றன.
இதுகுறித்து ஆணையர் நடராஜ் கூறுகையில், இந்தக் கண்காட்சியில் நடந்த பேஷன் ஷோவில் ஆபாசம் இருந்ததாக தகவல்வந்துள்ளது. இதுதொடர்பாக யாரும் புகார் தரவில்லை. இருப்பினும் விழா ஏற்பாட்டாளர்களிடம் விளக்கம் கேட்கப்படும்.
சென்னையில் நடைபெறும் இதுபோன்ற அழகிகள் அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் அனுமதிவாங்கும்போது எந்த மாதிரியான அணிவகுப்பு நடத்தப்படும் என்பது குறித்து யாரும் விளக்கமாக கூறுவதில்லை.
இதனால் தான் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இனிமேல் பேஷன் ஷோக்களை போலீஸார்கண்காணிப்பார்கள். ஆபாசமாக நடத்தப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் நடராஜ்.