சென்னை: மோசடி மந்திரவாதி கைது
சென்னை:
சென்னையில் தொழிலதிபரின் மனைவியிடம் ரூ. 25 லட்சம் பணத்தை மோசடி செய்த மந்திரவாதியை போலீஸார் வளைத்துப்பிடித்துக் கைது செய்தனர்.
இதையடுத்து எனது கணவர் பிரிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் சிறப்பு மாந்த்ரீகம் செய்ய வேண்டும் என்று அப்துல்ரஹ்மான் கூறினார். இதையடுத்து அவர் கேட்ட ரூ. 25லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் என்னை ஏமாற்றி விட்டார். அவரைக் கைது செய்து மோசடி செய்தபணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
ஆணையர் நடராஜ் உத்தரவுப்படி அப்துல் ரஹ்மானைப் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. உதவி ஆணையர் லட்சுமி நாதன்,ரஹ்மானிடம் தொலைபேசியில் பேசி தனக்குப் பிரச்சினை உள்ளதாகவும், அதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும்கூறியுள்ளார்.
இதையடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு பணத்துடன் வருமாறு அப்துல் ரஹ்மான் கூறியுள்ளார். அவர் சொன்ன இடத்தில்போலீஸ் படை காத்திருந்தது. அப்துல் ரஹ்மான் அங்கு வந்தவுடன் அவரை போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
அவரது வீட்டில் போலீஸார் சோதனை போட்டபோது அங்கு ரூ. 16 லட்சம் ரொக்கப் பணம், 25 பவுன் நகைகள் இருந்ததுதெரியவந்தது. மேலும் மோசடிப் பணத்தில் கிழக்கு தாம்பரத்தில் ரூ. 4 லட்சம் மதிப்பில் வீட்டு மனை வாங்கியிருந்ததும்தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அப்துல் ரஹ்மானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications