சென்னை: லிப்ட்டில் சிக்கி பெண் பலி
சென்னை:
சென்னையில், கணவனின் கண்ணெதிரே அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் சிக்கி 50 வயதுப் பெண்மணிபலியானார்.
அடையாறு கஸ்தூரிபாய் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள உறவினரின் வீட்டுக்கு செல்வதற்காக அங்கு சென்றனர்.மாடிக்குச் செல்வதற்காக லிப்ட்டில் ஏறினார்கள். முதலில் ரங்கராஜுலு லிப்ட்டில் ஏறினார்.
அவரைத் தொடர்ந்து உஷா ஏற முயன்ற போது திடீரென லிப்ட் மேலே கிளம்பியது. இதனால் தடுமாறிய உஷா லிப்ட்டுக்கும்,தரைத் தளத்துக்கும் இடையில் விழுந்து விட்டார். அவரை உள்ளே இழுக்க ரங்கராஜுலு முயன்றுள்ளார்.
ஆனால் அதற்குள் லிப்ட் மேலே சென்றதால் இடையில் சிக்கிய உஷா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். கண்எதிரிலேயே மனைவி உடல் நசுங்கி இறந்ததைப் பார்த்த ரங்கராஜுலு கதறி அழுது மயங்கி விழுந்தார்.
தீயணைப்பு வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து உஷாவின் உடலை மீட்டனர். விபத்து நடந்த லிப்ட் சில நாட்களாகபழுதடைந்துள்ளது. இதை சரி செய்யாமல் விட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications