அந்தமானில் இன்றும் மீண்டும் நில நடுக்கங்கள்
Subscribe to Oneindia Tamil
போர்ட் பிளேர்:
அந்தமான் நிக்கோபார் தீவில் இன்று காலை மீண்டும் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கம் சென்னையில் சில இடங்களிலும் லேசாக உணரப்பட்டது.
இந் நிலையில், இன்று காலை அந்தமான் நிக்கோபார் தீவில் இரண்டு முறை நில நடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை 7.48மணிக்கும், அதைத் தொடர்ந்து 8.56 மணிக்கும் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இவை முறையே ரிக்டர் அளவுகோலில் 5.3, 5.7 ஆக பதிவானது. இந்த நில நடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லைஎன்று கூறப்படுகிறது.
அந்தமானில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், சுனாமி அச்சம்தேவைஇல்லை. கடலில் அலைகள் வழக்கம் போல் இருந்து வருகிறது. பெரும் மாற்றம் இல்லை.
இருப்பினும் இரவு முழுவதும் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்றார்












Click it and Unblock the Notifications