தீவிரவாதிகளின் அடுத்த குறி பெங்களூர்?
பெங்களூர்:
லண்டன் மற்றும் எகிப்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பெங்களூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்என்று தகவல் வெளியாகியுள்ளதால் பெங்களூரில் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந் நிலையில், இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்த அல்கொய்தா இயக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களின் பட்டியலில் பெங்களூர் நகரம் முதலிடத்தில் இருப்பதாகவும்கூறப்படுகிறது.
இந்தியாவில் பெங்களூர் நகரம் வேகமாக வளர்ந்துத வரும் நகரங்களில் முதலிடத்தில் உள்ளது. இங்கு உலகின் முன்னணிசாப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஏராளமான வெளிநாட்டினர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் சட்டசபைக் கட்டிடமான விதான் செளதா, எச்ஏஎல் விமான தயாரிப்பு நிறுவனம் உட்பட முக்கிய நிறுவனங்கள் உள்ளன.எனவே பெங்களூரில் தாக்குதல் நடத்துவதின் மூலம் இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க முடியும் என்றுதீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதைத் தொடர்ந்து பெங்களூர் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விதான் செளதா, முன்னணிசாப்ட்வேர் நிறுவனங்கள், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து முதல்வர் தரம்சிங் கூறுகையில், பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அடிக்கடி தகவல்கள்வெளியாகின்றன. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்என்றார்.












Click it and Unblock the Notifications