குடிபோதையில் துன்புறுத்தல்; பாகனைக் கொன்றது யானை
நான்குநேரி:
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே குடிபோதையில் தாறுமாறாக அடித்து கொடுமைப்படுத்திய பாகனை, யானைதூக்கி வீசி அடித்துக் கொன்றது.
கோவில் அருகே யானையை நிறுத்தி வைத்து விழாவுக்கு வந்த பக்தர்களிடம், யானையை ஆசிர்வதிக்கச் செய்து காசுவசூலித்தார். அதன் பின்னர் யானையுடன் ஊர் திரும்புவதற்காக கிளம்பினார்.
மூலைக்கரைபட்டி என்ற ஊருக்கு வந்தபோது அங்குள்ள மதுக் கடை அருகே யானையைக் கட்டிப் போட்டு விட்டு மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினார். நன்றாக போதை ஏறிய நிலையில் யானையிடம் வந்த திருவேங்கடத்தான்,
மூலைக்கரைபட்டியில் உள்ள கடை வீதிகளில் யானையை வைத்து பிச்சை எடுக்கலாம் என்ற யோசனையுடன் ஊருக்குப்போகும் திட்டத்தைக் கைவிட்டு யானையை கடை வீதிக்கு திருப்பினார்.
யானையால் போக முடியாத குறுகிய சந்துகளுக்குள் எல்லாம் யானையை செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். கம்பால்யானையை அடித்தும், காயம் ஏற்படும் அளவுக்கு துன்புறுத்தியும் கடைகளில் காசு வாங்க வைத்துள்ளார் திருவேங்கடத்தான்.
திருவேங்கடத்தானின் கொடுமையை சகித்து வந்த யானை ஒரு கட்டத்தில் கோபத்தில் கொந்தளித்தது. தனது துதிக்கையால்திருவேங்கடத்தானை தூக்கிய யானை, அங்கிருந்த மின் கம்பத்தில் தூக்கி அடித்தது.
சரமாரியாக அடித்தும் வெறி தணியாத யானை அவரை அப்படியே தூக்கி அருகில் இருந்த சாக்கடையில் வீசி எறிந்தது.படுகாயம் அடைந்த பாகனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆயினும்திருவேங்கடத்தான் பரிதாபமாக இறந்தார்.
யானையின் கொந்தளிப்பைப் பார்த்த மூலைக்கரைப்பட்டி மக்கள் பீதியடைந்து ஓடினர். யானைக்கு மதம் பிடித்திருக்கலாம் எனஅவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த வனத்துறையினர் இன்னொரு பாகனுடன் அங்கு விரைந்து சென்று யானையை அடக்கி கட்டிப் போட்டனர்.திருவேங்கடத்தான் மீதிருந்த கோபம் காரணமாகவே யானை கோபமடைந்து அவரை தூக்கி வீசிக் கொன்றதாக கால்நடைமருத்துவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.