ஆடிட்டர் குருமூர்த்திக்கு குற்றப்பத்திரிகை நகல்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கை திசை திருப்பும் வகையில் கட்டுரைகள் எழுதியது தொடர்பாக ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி மீதானவழக்கில் இன்று அவருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை திசை திருப்பும் வகையில் கட்டுரைகள் எழுதியதாக குருமூர்த்தி மீது காஞ்சிபுரம் தனிப்படை போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குருமூர்த்தி முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
சமீபத்தில் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல்நீதிமன்றத்தில் குருமூர்த்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி உத்தமராஜின் உத்தரவுப்படி குருமூர்த்திக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்துவழக்கு விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications