காவிரி: பிரதமரை நாளை சந்திக்கிறார் ஜெ.- திமுக கூட்டணி இன்று சந்திப்பு
சென்னை:
தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடகம் திறந்து விடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை செவ்வாய்க்கிழமை நேரில்சந்தித்து கோரிக்கை விடுக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.
கிருஷ்ணராஜ சாகர் அணையிலும் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. போதுமான அளவு நீர் இருந்தும் தமிழகத்திற்குதண்ணீர் திறந்து விடாமல் உபரி நீரை மட்டுமே கர்நாடகம் விடுவித்து வருகிறது.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, கர்நாடக முதல்வர், பிரதமர் ஆகியோருக்கு ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். திமுகதலைவர் கருணாநிதியும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந் நிலையில், முதல்வர் ஜெயலலிதா நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கைசந்தித்து காவிரி நீர்ப் பிரச்சினையில் உடனடியாக தலையிட வேண்டும். தமிழகத்திற்குரிய நீரை திறந்து விடுமாறுகர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
காவிரி நீர் இல்லாததால் காவிரி பாசனப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், விவசாயிகள் அடைந்துள்ள துயரங்களையும்அவர் புள்ளி விவரங்களுடன் பிரதமரிடம் எடுத்துரைக்கவுள்ளார்.
ஜெயலலிதாவுடன் தலைமைச் செயலாளர் நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் டெல்லி செல்கிறது.
திமுக குழுவினர் இன்று சந்திப்பு:
இதற்கிடையே, காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விடக் கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கை திமுக கூட்டணித்தலைவர்கள் இன்று சந்தித்து மனு கொடுக்கிறார்கள். திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தலைமையிலான ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications