தொகுதி சீரமைப்பு: பந்த் நடத்த புதிய தமிழகம் முடிவு
சென்னை:
சட்டசபை மற்றும் மக்களவை தொகுதி சீரமைப்பைக் கண்டித்து தென் மாவட்டங்களில் வருகிற 29ம் தேதி முழு அடைப்பு(பந்த்) நடத்த புதிய தமிழகம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொகுதிகள் சீரமைக்கப்படுவது வழக்கமான விஷயம் தான். இருப்பினும் தற்போதையசீரமைப்புப் பணிகளில் பெரும் முறைகேடுகள் நடந்து வருகின்றன. மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள குழு, தொகுதிகளைமக்கள் நலனுக்கு விரோதமாகவும், சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் சுய லாபத்தை கணக்கில் கொண்டும் தொகுதிகளைமாற்றி அமைத்து வருகிறது.
இந்த சீரமைப்பின் மூலம் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கான தனித் தொகுதிகளின் எண்ணிக்கைபெருமளவில் குறைக்கப்படவுள்ளது. இதை எதிர்த்து 20 தென் மாவட்டங்களிலும் வருகிற 29ம் தேதி முழு அடைப்பு நடத்தபுதிய தமிழகம் முடிவு செய்துள்ளது. அதே நாளில் சாலைமறியல், ரயில் மறியல் போராட்டத்திலும் புதிய தமிழகம் ஈடுபடும்.
இந்தப் போராட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்க அழைக்கவுள்ளேன் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications