மதானி விடுதலை கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக்கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யக் கோரி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலம் நடத்தும்போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் மதானி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது உடல் நிலையைக் காரணம் காட்டி மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று மக்கள் ஜனாயகக் கட்சியும்,மதானியின் குடும்பத்தினரும் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இருப்பினும் மதானியை ஜாமீனில் விடுதலை செய்ய தமிழக அரசு, நீதிமன்றங்களில் ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

இந் நிலையில், மதானி விடுதலைக்காக,புதிய இயக்கம் ஒன்றை மக்கள் ஜனநாயகக் கட்சி ஆரம்பித்துள்ளது. மதானி விடுதலைகூட்டு நடவடிக்கைக் குழு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இயக்கம், வருகிற 28ம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தைநோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக கூட்டுப் போராட்டக் குழுஅறிவித்துள்ளது.இந்தப் பேரணியின்போது மனித உரிமை இயக்கங்களைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக குழு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மதானியை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துகோரிக்கை மனு கொடுக்கவும் இந்த போராட்டக் குழு முடிவு செய்துள்ளது.

கேரளாவுக்கு அடுத்த வாரம் அப்துல் கலாம் வருகிறார். அப்போது அவரிடம் மனு கொடுக்க இவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+