தமிழ்நாட்டில் வாகன சோதனை மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி:
சென்னையில் தானியங்கி வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்அளித்துள்ளது.
சமீபத்தில் மதுரையில் சேது சமுத்திரத் திட்ட தொடக்க விழாவின் போது திமுக தலைவர் கருணாநிதி, இது தொடர்பாக பிரதமர்மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்தார். பிரதமரும் உடனடியாக இதற்கு ஒப்புதல் அளித்தார்.
இந் நிலையில் சென்னையில் தானியங்கி வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அமைச்சரவைஇன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்கூறுகையில், சென்னை உட்பட இந்தியாவில் 5 இடங்களில் மோட்டார் வாகன பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ரூ. 1,718 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 வருடத்திற்குள் இவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் இந்த மையத்தை அமைக்கலாமா என்று ஆலோசனை செய்து வருகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications