நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகுஇரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைந்த உறுப்பினர்கள் சுனில் தத் , வாசுதேவ நாயர் உள்ளிட்டதலைவர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தினார். பின்னர் உறுப்பினர்கள் சில நிமிடம் மெளன அஞ்சலிசெலுத்தினார்கள்.
ராஜ்யசபாவில் அவைத் தலைவர் ஷெகாவத் மறைந்த உறுப்பினர் பிப்லாப் தாஸ் குப்தா உள்ளிட்ட மறைந்த உறுப்பினர்களுக்குஇரங்கல் அஞ்சலி செலுத்தினார்.தொடர்ந்து இரு அவைகளிலும் லண்டன் குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.பின்னர் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
பிறந்த நாள் வாழ்த்து:
இன்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு 76வது பிறந்த நாள். இதையொட்டி சாட்டர்ஜிக்கு எதிர்க்கட்சித் தலைவரும், பாஜகதலைவருமான அத்வானி, பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்கள் பிறந்த நாள்வாழ்த்து கூறினர்.
இதற்கு நன்றி கூறிய சாட்டர்ஜி, சபையை சுமுகமாக நடத்த உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.