நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு: மக்கள் ஓட்டம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் அருகே கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதில் கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துஓடினர்.
இந்த நில நடுக்கத்தால் சென்னையில் நேற்று இரவு மக்களிடையே பீதி ஏற்பட்டது. பலர் வீடுகளில் உறங்காமல் தெருக்களிலும்,சாலையோரங்களிலும் படுத்து இரவை கழித்தனர்.
இந் நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள புத்தளம் கடற்கரை பகுதியில் நேற்று நள்ளிரவு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.இரவு 1 மணியளவில் கடல் நீர் பொழிமுகத்தை தாண்டி கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்தது.
இங்குள்ள அரியபெருமாள்விளை காலனி கிராமத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட வீடுகள்உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீடுகளில் தண்ணீர் புகுந்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் நீர் இன்றும் தொடர்ந்து ஊருக்குள் வந்து கொண்டிருப்பதால் அப்பகுதியில் பெரும் பீதிஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுனில் பாலிவால் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தமாதத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது வழக்கம் தான். எனவே பொதுமக்கள் மீண்டும் சுனாமி வருமோ என்று அச்சமடையதேவையில்லை என்றார்.












Click it and Unblock the Notifications