மாற்றுப் பள்ளி கோரி கோர்ட்டுக்கு வந்த குழந்தைகள்!
சென்னை:
போலீஸ் உதவியுடன் இடிக்கப்பட்ட சென்னை பள்ளிக்கரணை பாவாணர் தமிழ் வழிப் பள்ளியின் மாணவர்கள் 70 பேர்தங்களை வேறு பள்ளியில் சேர்க்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று சீருடையுடன் வந்ததால் சிறிது நேரம் பரபரப்புநிலவியது.
இதையடுத்து பள்ளியைக் காலி செய்யுமாறு அவர் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். இருப்பினும் பள்ளியைக் காலிசெய்ய கால அவகாசம் தேவை என்று பள்ளி நிர்வாகம் கோரியிருந்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாத ராமசாமி, நீதிமன்றஉத்தரவுடன் கடந்த 19ம் தேதி இரவு போலீஸ் படையுடன் அங்கு வந்தார்.
பள்ளிக் கட்டடம் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பள்ளியில் இருந்த பொருட்கள், மாணவர்களின்சான்றிதழ்கள் கிணற்றில் தூக்கி வீசப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்களும், அப்பகுதிபொதுமக்களும் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிக் கட்டடம் இடிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குஇன்று நீதிபதி பி.டி.தினகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பள்ளியில் படித்து வந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது சீருடையுடன் நீதிமன்றத்திற்குவந்திருந்தனர். அனைவரும் வழக்கு நடந்த நீதிமன்ற அறைக்கு முன்பாக கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வழக்கை விசாத்த நீதிபதி தினகரன், பாவாணர் பள்ளியில் படித்து வந்த குழந்தைகளை வேறு அரசுப் பள்ளியிலோ அல்லதுதனியார் பள்ளியிலோ சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் அரசு வழக்கறிஞர் சோமையாஜுலுவுக்கு அறிவுறுத்தினார்.பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications