4 குழந்தைகளை உயிரோடு எரித்து தந்தையும் சாவு!
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மனைவி, நான்கு குழந்தைகளுடன் தந்தையும் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். இதில் அவரதுமனைவி மட்டும் உயிர் பிழைத்தார்.
சுப்ரமணியம் சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் அவருக்கும் யோகராணிக்கும் இடையே அடிக்கடி தகராறுஏற்படுமாம். இந் நிலையில் சுப்ரமணியத்திற்கு சென்னையில் ஒரு ஹோட்டலில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்துஅவர்சென்னை சென்று விட்டார். அங்கு வேலை பார்த்தும் கூட, வீட்டிற்குப் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந் நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சிக்கு வந்துள்ளார் சுப்ரமணியம். அப்போது அவருக்கும், யோகராணிக்கும்இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு காரணமாக சுப்ரமணியம் ஆத்திரமடைந்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் எழுந்த சுப்ரமணியம், மனைவி, குழந்தைகளை கொன்று விட வேண்டும் என்ற ஆத்திரத்துடன்வீட்டில்இருந்த பெட்ரோலை எடுத்து நான்கு பேர் மீதும் ஊற்றி தீவைத்துள்ளார்.
இதில் 5 பேரும் தீயில் கருகினர். அப்போது, எங்களை அழித்து விட்டு நீ மட்டும் வாழ்ந்து விடுவாயா என்று சத்தம் போட்டுக்கொண்டே கணவர் சுப்ரமணியத்தை, யோகராணி எரியும் தீயுடன் கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனால் சுப்ரமணியமும் தீயில்கருகினார்.
6 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தோர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல்இன்று காலை சுப்ரமணியமும், நான்கு குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர். யோகராணி உயிருக்கு ஆபத்தான நிலையில்சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி இறந்தது திருவானைக்காவல் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications