ஜெ. பாதுகாப்புக்கு அதி நவீன புல்லட் படை!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு, அதி நவீன ராயல் என்பீல்டு புல்லட் வழங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக போலீஸார் பாதுகாப்புப் பணிகளுக்காக பொதுவாக புல்லட்டுகளையே பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதுஅறுதப் பழசு மாடல் ஆகும். இந்த புல்லட்டில் அதி வேகமாக செல்ல முடியாது.

மேலும், இதை விட சிறந்த புல்லட்டுகளை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதையடுத்து தமிழகபோக்குவரத்து போலீஸாருக்கு, குறிப்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவலர்களுக்கு அதி நவீன ராயல் என்பீல்டுபுல்லட்டுகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை போலீஸாருக்காகவே ஸ்பெஷலாக இந்த புல்லட்டுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வடிவமைத்துள்ளது.வெளிநாடுகளில் உள்ளது போல இந்த புல்லட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாக்கி டாக்கி, சுழலும் குழல் விளக்கு,வயர்லைஸ் மைக், சைரன் உள்ளிட்டவை இந்த புல்லட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒரு புல்லட்டின் விலை ரூ. 63,000 ஆகும். இந்த வகை புல்லட் ஒன்று மாதிரிக்காக சென்னை மாநகர ஆணையர் நடராஜிடம்காண்பிக்கப்பட்டது. அதைப் பார்வையிட்ட நடராஜ், சில மாறுதல்களைக் கூறியுள்ளார்.

இவை செய்து முடிக்கப்பட்டதும், சென்னை மாநகரில் இந்த புல்லட்டுகள் புழக்கத்திற்கு வரத் தொடங்கும். மிக முக்கியப்பணிகளுக்கு, அதாவது முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு மற்றும் முக்கியமான நேரங்களில் போக்குவரத்தைசீர்படுத்துவது

போன்ற பணிகளுக்கு இந்த புல்லட்டுகள் பயன்படுத்தப்படவுள்ளது. வருகிற சுதந்திர தினம் முதல் இந்த புல்லட்டுகள்பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+