அடுத்த பிறவியில் பாடகியாக வேண்டும்: ஜெ.வின் ஆசை!
சென்னை:
அடுத்த பிறவி ஒன்று இருந்தால் அதில் நான் பாடகியாக பிறக்க வேண்டும். பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யை ஆக வேண்டும்என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கந்தர்வ கான சாம்ராட் என்ற விருதை பாலமுரளிகிருஷ்ணாவுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பாலமுரளி கிருஷ்ணா பாடும்போது, ஜெயலலிதா பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கிஅதை ஜெயலலிதாவுக்கு அர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார்.
பின்னர் ஜெயலலிதா பேசுகையில், பாலமுரளி கிருஷ்ணாவைக் கவுரப்படுத்துவதற்காகவே நான் இங்கு வந்தேன். ஆனால்,நான் எதிர்பாராத வகையில், ஒரு புதிய ராகத்தை உருவாக்கி இரு கீர்த்திகளை அந்த ராகத்தில் அமைத்து அதற்கு எனதுபெயரையும் சூட்டி எனக்கு அர்ப்பணித்துள்ளார்.
இது நான் கனவிலும் எதிர்பாராதது. என் வாழ்வின் இறுதி நாள் வரை எனக்களிக்கப்பட்ட இந்த கவுரவம் நெஞ்சிலேயேஇருக்கும். இந்த நேரத்தில் எனக்குள் இருக்கும் விருப்பம் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால் நான் பாலநபரளி கிருஷ்ணாவின் சிஷ்யையாக பிறக்க வேண்டும். பாடகியாக ஆகவேண்டும். அவரிடம் கர்நாடக இசை பயில வேண்டும். நல்ல பாடகி என்று அவரிடம் சபாஷ் பெற வேண்டும்.
பாலமுரளி கிருஷ்ணா பாரத ரத்னா விருது பெற முற்றிலும் தகுதியானவர். அந்த நாளும் வரும். அவர் பாரத ரத்னா விருதுபெறுவதை நான் பார்ப்பேன். இதன் மூலம் இந்தியாவுக்கும் பெருமை சேரும் என்றார் ஜெயலலிதா.
நிகழ்ச்சியில் சுமார் 3 மணி நேரம் அமர்ந்திருந்தார் ஜெயலலிதா. பாலமுரளி கிருஷ்ணாவின் பாட்டுக் கச்சேரி, 75 பாடகர்கள்ஒன்று சேர்ந்து பாட, 75 பேர் ஆட இடம் பெற்ற கலைநிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது.