திருட்டு வழக்கு: கோர்ட்டில் ராஜகோபால் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜீவஜோதியின் வீட்டில் கம்ப்யூட்டர் உள்ளிட்ட ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஆட்களுடன் வந்து கொள்ளையடித்துச்சென்ற வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மற்றும் ஜீவஜோதி ஆகியோர் ஆஜராகினர்.
இந்தப் புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீஸார் திருடு போன பொருட்களை மீட்டுக் கொடுத்தனர். இதுதொடர்பாகசரவண பவன் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று இவ்வழக்குவிசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலும், ஜீவஜோதியும் ஆஜராகி நீதிபதி மோகன்ராஜ் முன்பு வாக்குமூலம்அளித்தனர்.
பின்னர் வழக்கை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications