For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீதிபதி முன் ரவுடி கொலை: 27 பேரும் விடுதலை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கண் முன்பாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை எழும்பூர் 10வது குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டு விஜயக்குமார் என்ற ரவுடி, வழக்கு ஒன்றின்விசாரணைக்காக நீதிபதி தேவதாஸ் முன்பு ஆஜராகியிருந்தார். அப்போது ஹெல்மட் அணிந்த ஒரு கும்பல் அங்கு வந்துநீதிபதி கண் முன்பாகவே விஜயக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தது.

இந்த கொலை தொடர்பாக கேட் ராஜசேகர், மாட்டு சேகர் உள்ளிட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்குசென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயபால் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கொலை வழக்கில் முக்கிய சாட்சியான நீதிபதிதேவதாஸ், குற்றவாளிகள் ஹெல்மட் அணிந்து வந்ததால் அவர்களை அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறியுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட 27 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே 27 பேரையும்விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X