For Daily Alerts
Just In
நீதிபதி முன் ரவுடி கொலை: 27 பேரும் விடுதலை!
சென்னை:
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி கண் முன்பாக ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட27 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை தொடர்பாக கேட் ராஜசேகர், மாட்டு சேகர் உள்ளிட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்குசென்னை 7வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஜெயபால் தீர்ப்பு வழங்கினார். அப்போது, கொலை வழக்கில் முக்கிய சாட்சியான நீதிபதிதேவதாஸ், குற்றவாளிகள் ஹெல்மட் அணிந்து வந்ததால் அவர்களை அடையாளம் காட்ட முடியவில்லை என்று கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 27 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எனவே 27 பேரையும்விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
Story first published: Tuesday, July 26, 2005, 5:30 [IST]