For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளா, அந்தமானில் நில நடுக்கம்

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:

கேரளாவின் தென் கடலோர பகுதி மற்றும் அந்தமானில் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் மற்றும் இந்தோனேஷியாவில் கடந்த சில தினங்களாக மீண்டும் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால் மீண்டும்சுனாமி வருமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. சென்னையிலும் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை இரவுலேசான நில நடுக்கம் உணரப்பட்டது.

இந் நிலையில் அந்தமானில் இன்று காலை 7.47 மணிக்கும், 8.56 மணிக்கும் நில நடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் இது முறையே 5.3 மற்றும் 5.7 ஆக பதிவாகியிருந்தது. இந்த நில நடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்இல்லை.

இதே போல கேரளாவின் தென் கடலோர பகுதிகளில் இன்று காலை லேசான நில நடுக்கம் உணரப்பட்டது. அதிகாலை 4.15மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.6ஆக பதிவாகியிருந்தது.

நில நடுக்கத்தின் அளவு குறைந்த சக்தி கொண்டதாக இருந்ததால் அதிகமாக மக்களால் இதை உணர முடியவில்லை. ஆனாலும்நில அதிர்வை பதிவு செய்யும் கருவியில் பதிவாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X