3 மாவட்டங்கள் பிரிப்பு: மதுரையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் வரம்பிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சென்னைஉயர்நீதிமன்றத்துடன் இணைக்கும் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றக் கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் இன்றுஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை தொடங்கப்பட்டது. மதுரை கிளையுடன் 13 தென்மாவட்டங்கள் இணைக்கப்பட்டன.

தற்போது திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்டங்களை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான கோப்பு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்தத் தகவல் மதுரை வழக்கறிஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை உயர்நீதிமன்றக் கிளைவளாகத்தில் கூடிய உயர்நீதிமன்றக் கிளை வழக்கறிஞர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜஸ்வந்த் சிங் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தான் 13 மாவட்டங்களும் மதுரை கிளையுடன் இணைக்கப்பட்டன.தற்போது அதிலிருந்து 3 மாவட்டங்களைப் பிரிப்பது, மக்கள் கருத்துக்கு எதிரானதாகும்.

எனவே இந்த முடிவை கைவிட வேண்டும். அடுத்த கட்டப் போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+