வறுமையால் குழந்தை கொலை: தாயின் தண்டனையைக் குறைக்க ஆளுநருக்கு பரிந்துரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வறுமையில் வாடியதால் 4 மாத கைக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்க்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையைக்குறைப்பது குறித்த முடிவை ஆளுநரிடம் விடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.

ஈரோடு மாவட்டம் கச்சேரி வலசு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இஸ்மாயில் பீவி. இவரது கணவருக்கும், பீவிக்கும் இடையேஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர், பீவியை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். 4 வயது மற்றும் 4 மாத கைக்குழந்தை ஆகியோருடன் தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பீவி.

வறுமையில் வாடிய பீவி, தனது 4 மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தார். இதையடுத்து வெள்ளக்கோவில்போலீஸார் அவரைக் கைது செய்து ஈரோடு செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் கைக்குழந்தையைகொலை செய்த குற்றத்திற்காக பீவிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பினால் அதிர்ச்சி அடைந்த பீவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 4 வயதுக் குழந்தையைவளர்க்க வேண்டிய பொறுப்பு உள்ளதால் தன்னை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் பி.டி.தினகரன், சொக்கலிங்கம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பீவிக்குவிதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், வறுமை, கணவர் பிரிந்து சென்றது ஆகியவற்றால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த செயலை மனுதாரர்செய்ததாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த வழக்கு ஆளுநருக்கு பரிந்துரை செய்யக் கூடிய வழக்காகும். அரசியல் சட்டம் 161வது சட்டப் பிரிவின் கீழ்,தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. இன்னொரு குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய நிலையில்இப்பெண் உள்ளார்.

எனவே இத்தண்டனையைக் குறைக்க இவ்வழக்கை ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+