சோனியாவை சந்திக்க விநாயகமூர்த்தி முடிவு; தடுக்க வாசன் தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள எம்.எல்.ஏ. விநிாயகமூர்த்தி டெல்லிக்கு விரைகிறார்.சோனியாவை அவர் சந்தித்து விடாமல் தடுக்க ஜி.கே.வாசன் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியதால் காங்கிரஸ் கட்சியினரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டுள்ளார் விநாயகமூர்த்தி. கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைத்து அவரை வாசன்ஆதரவாளர்கள் தாக்கினர்.

வீட்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக வாசனின் தீவிர ஆதரவாளரான சென்னை மாநகராட்சிகாங்கிரஸ் தலைவர் ராயபுரம் மனோ உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வாசன் எதிர்ப்பாளர்களின் ஆதரவைப் பெறுவதில் விநாயகமூர்த்தி தீவிரமாக இறங்கியுள்ளார்.மத்திய அமைச்சர் இளங்கோவன், ஜெயந்தி நடராஜன், தங்கபாலு, திண்டிவனம் ராமமூர்த்தி உள்ளிட்டதலைவர்களை அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இவர்களைத் திரட்டி சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தவும், அதில் வாசனை பகிரங்கமாக விமர்சித்துப்பேசவும் அவர் திட்டமிட்டுள்ளார். தன் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தால்,

வாசன் எதிர்ப்பு தலைவர்களின் மறைமுக ஆதரவுடன் புதிய கட்சியை தொடங்கவும் அவர் தயாராக உள்ளதாககூறப்படுகிறது. வருகிற 9ம் தேதி இந்தப் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இந் நிலையில், விநாயகமூர்த்தி வெள்ளிக்கிழமை டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தியை சந்தித்துவாசன் குறித்து அவர் புகார் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சோனியா காந்தியை விநாயகமூர்த்தி சந்திக்க விடாமல் தடுக்க வாசன் தரப்பு பல்வேறு முயற்சிகளில்இறங்கியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அம்பிகாசோனி மூலம்சோனியா-விநாயகமூர்த்தி சந்திப்பைத் தடுக்க வாசன் தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+