மதுரை உயர்நீதிமன்றத்திலிருந்து 3 மாவட்டங்கள் பிரிப்பு?
மதுரை:
மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் தற்போது இணைந்திருக்கும் திருச்சி, தஞ்சாவூர், கரூர் ஆகிய 3 மாவட்டங்களையும் பிரித்துசென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் மதுரைவழக்கறிஞர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
முதலில் மதுரை கிளையில் 16 மாவட்டங்கள் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக பெரம்பலூர், நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் சென்னையுடன்தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து 13 மாவட்ட வழக்குகள் மட்டும் தற்போது மதுரை கிளையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில்திருச்சி, தஞ்சை மற்றும் கரூர் மாவட்டங்களை சென்னை உயர்நீதிமன்றத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் நியமித்த 8 நீதிபதிகள் கொண்ட குழு இதுதொடர்பான அறிக்கையை தலைமை நீதிபதிக்கு அனுப்பிவைத்தது. இதைத் தொடர்ந்து மதுரை கிளையிலிருந்து இந்த மாவட்டங்களை சென்னைக்கு மாற்றுவது தொடர்பான கோப்புகுடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மதுரை மாவட்ட வழக்கறிஞர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி உள்ளிட்ட 3மாவட்டங்களிலிருந்தும் அதிக அளவில் வழக்குகள் வருகின்றன.
எனவே இவற்றை மதுரை கிளையிலிருந்து மாற்றுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தங்களது எதிர்ப்பை மீறிசென்னையுடன் இவற்றை சேர்த்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட வழக்கறிஞர்கள் மட்டும் தென் மாவட்ட வழக்கறிஞர்களுடன்சேர்ந்து போராட்டத்தை நடத்த மதுரை வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications