காவிரி: பிரதமர் மீது ஜெ. சரமாரி புகார்- நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம்
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் அடுத்த கட்டமாக மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
காவிரி நதியின் நீரில் தமிழகத்திற்குரிய பங்கைத் தராததோடு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி வழங்கவேண்டிய நீரைக் கூட முறையாக வழங்காமல் உள்ளது கர்நாடகம். இந்தப் போக்கைக் கண்டிக்காமலும், தமிழகத்திற்குகிடைக்க வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத் தராமலும் உள்ள மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இதனைக் கண்டித்தும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை உடனே செயல்படுத்தக் கோரியும், அதிமுக சார்பில்கடந்த 22ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தின் கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 25ம்தேதி திங்கள்கிழமையன்று பிரதமரை நேரில்சந்திப்பதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் 26ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று தான் பிரதமரை நேரில் சந்திக்க நேரம்ஒதுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நானும், மூத்த அமைச்சர்களும், கழக எம்.பிக்களும் பிரதமரை சந்தித்து தமிழக கோரிக்கையைவலியுறுத்தினோம்.
மேலும் இந்தப் பிரச்சினையில் கர்நாடக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அமைச்சர்கள், அதிமுகவினர்அடங்கிய குழுவினருக்கு 26ம் தேதி நேரம் ஒதுக்கித் தர வேண்டிய கடிதம் அனுப்பியிருந்தும், இப்பிரச்சினையின்முக்கியத்துவத்தை மதிக்காமல், 26ம் தேதியன்று நேரம் ஒதுக்கித் தரவில்லை.
ஜூலை இறுதியில் தனது அணைகளில் தண்ணீர் நிரம்பும்போது தான் அணைகளில் தேக்கி வைக்க இயலாத உபரி நீரை திறந்துவிடுவதை கர்நாடகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து வாராந்திர அடிப்படையில் கர்நாடக அரசுதமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கர்நாடக அரசு அவ்வாறு செய்யாததால், இந்த ஆண்டும் ஜூன் 12ம்தேதிகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையைத் திறந்து விட இயலவில்லை.
கர்நாடக அரசு தென் மேற்கு பருவ மழை மூலம் பெறும் நீர் அனைத்தையும் தனக்காக சேமித்து வைத்துக் கொள்ளாமல்தமிழகத்திற்கு உரிய நீரை வாராந்திர அடிப்படையில் வழங்கியிருந்தால் குறுவை சாகுபடியை தொடங்கியிருக்க முடியும்.
இப்போதாவது தமிழகத்திற்கு இந்த ஆண்டு வழங்கியிருக்க வேண்டிய நீரை உடனடியாக விடுவித்தால் குறுவை சாகுபடியைஉடனடியாக தொடங்க இயலும்.
பிரதமருடன் சந்திப்பு திருப்தி இல்லை:
பிரதமருடன் நடந்த சந்திப்பு எங்களுக்குத் திருப்தி தரவில்லை. பிரதமர் எந்தவித உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை.கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடும்படி அவர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கைக்கு அவர்எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை.
கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பு, கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து நான் தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறினேன். இந்த விவரங்கள் சரியானவையே என்று இந்தக் கூட்டத்தில் மத்திய நீர் வளத்துறைஅமைச்சரும் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில், மத்திய அமைச்சர் குழுவை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி நிலைமை ஆராயப்படும் என பிரதமர் கூறியதுகாலம் தாழ்த்துவதற்குத் தான் வழி வகுக்கும். தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன்.கர்நாடகத்திற்கு அனுப்பப்படும் குழு புதிதாக என்ன விவரங்களை கண்டுபிடித்து விடும்?
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு உண்மையில் தமிழக விவசாயிகளிடம் பரிவு கொண்டிருந்தால்காவிரி நீரை தமிழகத்திற்கு விடுவிக்கும்படி கர்நாடக அரசை வற்புறுத்த முடியும்.
மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம்:
ஆனால் அவ்வாறு செய்ய மத்திய அரசு முன்வரவில்லை. திமுக தலைமையிலான தமிழக எதிர்க்கட்சிகள் ஒரு கண் துடைப்புநாடகமாகவே பிரதமரிடம் மனு அளித்துள்ளனர்.
காவிரியில் கர்நாடக அணைகள் நிரம்புவதால் தானாகவே வரும் உபரி நீரை தங்களது முயற்சியால் பெறப்பட்டது என மார்தட்டிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றலாம்.
ஆனால் தமிழக மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட எனது தலைமயிலான அதிமுக அரசு அவ்வாறு திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது.
எனவே பிரதமரிடம் வலியுறுத்தியும், தமிழகத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாத நிலையிலும், கர்நாடக அரசுஇந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத நிலையிலும், மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் அலட்சியப் போக்குகளைக்கண்டித்தும்,
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின் படி உடனடியாக தண்ணீர் திறந்து விடக் கோரியும், தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு 28ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரதஅறப்போராட்டத்தை நடத்திட கழகம் தீர்மானித்துள்ளது.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவின் அனைத்து அணிகளைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும், விவசாயிகளும் கலந்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார் ஜெயலலிதா.