For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உயர்நீதிமன்றம்: 7 கூடுதல் நீதிபதிகள் நிரந்தரமாக்கப்படுகிறார்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள நீதிபதி பதவி காலியிட நெருக்கடியை சமாளிக்க இந்த மாதத்தில் ஓய்வு பெறவுள்ள7 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் 42 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. ஆனால் தற்போது 24 நீதிபதிகள் மட்டுமே பணியில்உள்ளனர். இதனால் வழக்கு விசாரணையில் பெரும் தாமதம் நிலவுகிறது.

புதிய நீதிபதிகளை நியமிக்க இதுவரை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மூலம் 3 முறை நீதிபதிகள் பட்டியல்அனுப்பப்பட்டும் பாமக உள்ளிட்ட சில கட்சிகளின் நெருக்கடி காரணமாக புதிய நீதிபதிகள் நியமிக்கப்படாமல் இழுபறி நீடித்துவருகிறது.

இந் நிலையில் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 8 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.இதனால் மேலும் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதைத் தவிர்க்க 8 பேரில் 7 பேரை நிரந்தர நீதிபதிகளாக பதவி உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இன்னொருநீதிபதியின் உடல் நலம் சரியில்லை என்பதால் அவரது பதவியை நீட்டிக்க மத்திய அரசு விரும்பவில்லை.

இந்த நியமனம் தொடர்பான உத்தரவு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X