சண்டை போடக் கூடாது: திமுகவினருக்கு கருணாநிதி அறிவுரை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவினர் தங்களுக்குள் சண்டை போடக் கூடாது. ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என திமுக தலைவர்கருணாநிதி அறிவுரை கூறியுள்ளார்.

திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட அளவிலான நிர்வாகிகளை கருணாநிதி சந்தித்துகலந்துரையாடி வருகிறார். சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராகும் விதத்தில் இந்த கலந்துரையாடல் கூட்டம் நடந்துவருகிறது.

புதன்கிழமை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். அவர்களுக்குகருணாநிதி ஏகப்பட்ட அறிவுரைகளை வாரி வழங்கினார்.

கருணாநிதி நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், திமுகவினர் மத்தியில் மனவிரோதம், குரோதம் இருக்கக் கூடாது.அப்படி இருந்தால் அது அடிப்படையிலேயே விஷத்தைப் பாய்ச்சி விடும்.

ஒருவரையொருவர் மதித்து நடக்க கற்றுக் கொள்ள வேண்டும். தலைவரைப் பின்பற்றுவதாக கூறும் நீங்கள்அவர்களைப் போல பொறுமையுடன் இருக்க வேண்டாமா?

இரண்டு பிளவாக கட்சியைப் பிரித்து விடும் அளவுக்கு விரோதத்தை வளர்த்துக் கொள்ளக் கூடாது. அதனால்நமது சக்தி போய் விடும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தி விடும்.

குரங்குப் புண் சிறிதாகத் தான் தோன்றும். ஆனால் சொறிந்து சொறிந்து தன்னுடையே உயிருக்கே ஆபத்தைஏற்படுத்துகிற அளவுக்கு அதை குரங்கு ஆக்கி விடும். அதேபோல ஒரு சில இடத்திலே ஏற்பட்டிருக்கிற இந்தப்புண்ணை குரங்குப் புண்ணாக மாற்றி விடக் கூடாது.

அதிமுகவினர் இப்போதே தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கி விட்டார்கள் என்று வரும் செய்தி பொய்யல்ல.அதைப் படிக்கின்ற மக்கள் திமுக இன்னும் வேலையை தொடங்கவில்லை என்று பேச ஆரம்பித்தால் அதுவேநமக்கு சோர்வை ஏற்படுத்தி விடும்.

போஸ்டர் ஒட்டுவதில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். ஒட்டுவதில் தவறில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது.ஆனால் அதை பார்க்கும் பொதுமக்களுக்கு நம் மீது வெறுப்பு வந்து விடக் கூடாது என்று அறிவுரை வழங்கினார்கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+