காவிரி: பிரதமர்- கருணாநிதி தொலைபேசியில் பேச்சு
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதியிடம் பிரதமர்மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இந்தக் கடிதத்தை பிரதமரிடம்அளித்தனர்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் இன்று (புதன்கிழமை) காலை கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தங்களது கடிதம் கிடைத்தது. காவிரிப் பிரச்சினை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஉறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்லி போலீஸ் தடியடிக்கு கண்டனம்
இதற்கிடையே டெல்லி அருகே குர்கான் பகுதியில் ஹோண்டா தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது ஹரியானா போலீஸார்நடத்திய தடியடி மனிதத் தன்மையற்றது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்ப்பாட்டம் செய்த தொழிலாளர்கள் மீது போலீஸார்காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை காயப்படுத்தியிருப்பது மனிதத்தன்மையற்றது,கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதம் கொடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். சட்டத்தைதுஷ்பிரயோகம் செய்த போலீஸார் மீது ஹரியானா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications