3 வீரப்பன் கூட்டாளிகளுக்கு 7 ஆண்டு கடுங்காவல்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 3 பேருக்கு தர்மபுரி விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கிதீர்ப்பளித்தது.
இந்த வழக்கில் வீரப்பன் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தர்மபுரி விரைவு நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டு வந்தது.
தற்போது வீரப்பன் உள்ளிட்ட 10 பேர் இறந்து விட்டனர். முத்து வீரன் என்பவர் வழக்கின் பாதியிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டார். மொட்டையன், கந்தசாமி, நாகராஜ் ஆகிய 3 பேர் மீது விசாரணை நடந்து வந்தது.
விசாரணையின் இறுதியில் 3 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்துமூவரும் சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications