தினகரன் மனுவை எதிர்த்து அரசு ஆட்சேபனை மனு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி டி.டி.வி. தினகரன் தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக அரசுதரப்பில் ஆட்சேபனை மனு தாக்கல் செய்யப்பட்டது. தினகரனின் மனுவை டிஸ்மிஸ் செய்யுமாறு தனி நீதிபதியை அரசுவழக்கறிஞர் ஆச்சார்யா கேட்டுக் கொண்டார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி அதிமுக எம்.பி. தினகரன் பெங்களூர்தனி நீதிமன்றத்தில் 26ம் தேதி மனுத் தாக்கல் செய்தார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி பச்சாப்பூரே, விசாரணையைநேற்றைக்கு ஒத்தி வைத்தார்.

இதையடுத்து நேற்று விசாரணை நடந்தது. அப்போது தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆட்சேபித்து அரசுவழக்கறிஞர் ஆச்சார்யா மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், தினகரன் மீதான குற்றத்தை தனி நீதிமன்றம் ஜூலை 2ம் தேதிகவனத்தில் எடுத்துக் கொண்டது.

ஆனால் இப்போது தினகரனை நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறுவது தவறு. வழக்கில் தினகரனைகவனத்தில் கொள்ளும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுதள்ளுபடி செய்யப்பட்டது.

மனுதாரரை கவனத்தில் கொள்வது தொடர்பாக ஏற்கனவே மனுத் தாக்கல் செய்து, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளசூழ்நிலையில் மீண்டும் இங்கு மனுத் தாக்கல் செய்தது சட்டவிரோதம். மேலும், இந்த விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின்முடிவு தான் இறுதி.

மக்கள் பிரநிதிகள் மீது ஊழல் வழக்கு தொடரும் போது, ஊழல் தடுப்பு சட்டம் 19வது பிரிவின் கீழ் அனுமதி பெற வேண்டும்என்பது உண்மை. ஆனால், 1991 முதல் 96 வரை தினகரன் மக்கள் பிரதிநிதி கிடையாது.

இப்போது அவர் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார். இதனால், 1991, 96ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவித்ததற்காக தினகரன் மீது வழக்கு பதிவு செய்யும் போது, 19வது பிரிவின் கீழ் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லைஎன்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து தினகரனின் வழக்கறிஞர் குமார் வாதிடுகையில், அரசு தரப்பால் தாக்கல் செய்யப்பட்ட புதிய குற்றப்பத்திரிகைசரியாக இல்லை. சொத்துக் குவிப்பு மற்றும் லண்டன் ஹோட்டல் வழக்கின் இரு குற்றப்பத்திரிகையையும் ஆய்வு செய்துமுழுமையான திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், அரசுத் தரப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை முழுமையானதாக இல்லை. புதிய குற்றப்பத்திரிகையில் தினகரன்மீது குற்றச்சாட்டுகள் கூறப்படவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் 5வது எதிரியாக நீதிமன்றத்தால் சேர்க்கப்பட்டிருக்கும்தினகரனை, நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும், மக்கள் பிரதிநிதிகள் மீது ஊழல் வழக்கு தொடரும் போது ஊழல் தடுப்பு சட்டம் 19வது பிரிவின் கீழ் அனுமதி பெறவேண்டும். ஆனால், தினகரன் மீது வழக்கு தொடரும் போது எந்த அனுமதியும் பெறவில்லை.

சொத்து குவிப்பு வழக்குக்கும் தினகரனுக்கும் சம்பந்தம் இல்லை. இதனால், தினகரனை சொத்து குவிப்பு வழக்கில் இருந்துவிடுவிக்க வேண்டும் என்றார்.

இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதி பச்சாப்பூரே இன்றைக்கு ஒத்தி வைத்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+