ஊனற்றவரை எரித்துக் கொன்றவர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்:

பெண்ணுடன் தான் வைத்திருந்த கள்ளத் தொடர்பை அறிந்து கொண்ட ஊனமுற்ற, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைஎரித்துக் கொலை செய்த நபரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ளது விரதக்குளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் 56 வயது சுப்ரமணி.இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்துசந்தோஷமாக இருந்து வந்தனர்.

இவர்களது கள்ளத் தொடர்பு, அதே கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் குருசாமி ஆகிய இரு சகோதரர்களுக்குத் தெரியவந்துள்ளது. இவர்களுக்குத் தெரிந்து விட்ட தகவல் சுப்ரமணிக்கும் தெரிந்து விட்டது.

இதனால் இருவர் மீதும் சுப்ரமணி காட்டமாக இருந்து வந்தார். இந் நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு சுப்ரமணி,சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். நள்ளிரவில் சிறு நீர் கழிப்பதற்காக குருசாமி எழுந்து வெளியே வந்துள்ளார்.

அப்போது சுப்ரமணியும், அந்தப் பெண்ணும் ஏடாகூடமான நிலையில் இருப்பதைப் பார்த்து விட்டார். இதைக் கண்ட சுப்ரமணிஆத்திரமடைந்தார். நம்மை உளவு பார்க்கிறார்களோ என்று சந்தேகப்பட்ட அவர், குருசாமி வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டதும், வெளியே வந்து அவர்களது குடிசைக்குத் தீவைத்தார். இதில் குடிசை வீடு பற்றி எறிந்தது.

உடல் ஊனமுற்றவரான பெருமாள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். குருசாமி காயங்களுடன் உயிர்தப்பினார். இதுகுறித்து குருசாமி கொடுத்த புகாரின் பேரில் அபிராமம் போலீஸார் சுப்ரமணியைக் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+