சதுர்வேதி வழக்கு மகளிர் கோர்ட்டுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தொழிலதிபரின் மனைவி மற்றும் டீன் ஏஜ் வயது மகளைக் கடத்திச் சென்று பாலியல் கொடுமைப்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள சதுர்வேதி சாமியாரின் வழக்கு, சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்திலிருந்து, மகளிர் நீதிமன்றத்திற்குமாற்றப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சுரேஷின் மனைவி மற்றும் மகளை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று அங்கு பாலியல்கொடுமைப்படுத்தியதாக சதுர்வேதி சாமியார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன.குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளார்.சதுர்வேதி மீதான வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இன்று வழக்குவிசாரணைக்கு வந்தபோது, தொழிலதிபரின் மனைவி மற்றும் மகளைக் கடத்திய வழக்கை ஐந்தாவது மகளிர் நீதிமன்றத்திற்குமாற்றுவதாக நீதிபதி முருகேசன் உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆகஸ்ட் 5ம் தேதி சதுர்வேதியின் வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications