மும்பை மழைக்கு 690 பேர் பலி: முதல்வர் தேஷ்முக்
மும்பை:
மகராஷ்டிர மாநிலத்தில் பெய்த மழைக்கு இதுவரை 690க்கும் அதிகமானோர் பலியாகி விட்டனர் என்றும் மும்பையில் மட்டும்370 பேர் இறந்துள்ளனர் என்றும் அம்மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இந்த கனமழைக்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர். மீட்புப் பணிகளில் ராணுவத்தினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் மகராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் இன்று நிருபர்களிடம் கூறுகையில், மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில்பெய்த மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 690ஐ தாண்டி விட்டது.
மும்பையில் மட்டும் 370 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை தேசியபேரழிவாக கருதி மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். மும்பையில் இதற்கு முன்பு இந்த அளவிற்கு மோசமாக மழைபெய்ததில்லை. கடந்த 26ம் தேதி அன்று ஒரே நாளில் மும்பையில் 70மி.மீ மழை பெய்தது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்கும் 10கிலோ அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றார்.