தர்மபுரி பஸ் எரிப்பு: பாமக பிரமுகர் "பல்டி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று நீதிமன்ற ஊழியர் உட்பட 6 பேர் சாட்சியமளித்தனர். இதில் பாமக பிரமுகர் திடீர்பல்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று தர்மபுரி ஒன்றிய பாமகஇளைஞர் அணி செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் உட்பட 6 பேர் சாட்சியம் அளித்தனர்.

பாலகிருஷ்ணன் கூறும்போது, 2.2. 2000 அன்று தர்மபுரியில் நடந்த மறியல் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை என்றுகூறினார். மேலும் இது குறித்து போலீஸார் தன்னிடம் எதுவும் விசாரிக்கவில்லை என்றும் கூறினார்.

அப்போது அரசு வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் குறுக்கிட்டு, சம்பவத்தை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்கள். இது குறித்துஅதிமுக பிரமுகர் டி.கே. ராஜேந்திரனிடம் கூறியிருக்கிறீர்கள். அதை போலீஸிடம் வாக்குமூலமாகவும் கொடுத்திருக்கிறீர்கள்என்றார்.

பின்னர் வழக்கு விசாரணையை நீதிபதி கிருஷ்ணராஜா செவ்வாய்க்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+