1,000 நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள மேலும் 1000 கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.500 நிதியுதவிஅளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கலைத்துறையில் ஈடுபட்டு தற்போது நலிவடைந்த நிலையில்இருக்கும் கிராமியக் கலைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 500 நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது 4150கலைஞர்கள் உதவி பெற்று வருகிறார்கள்.

இந்த ஆண்டு முதல் கூடுதலாக மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதம் ரூ. 500 நிதியுதவி அளிக்கப்படும் என கடந்த ஏப்ரல்மாதம் சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது கூடுதலாக 1000 பேருக்கு நிதியுதவிஅளிப்பதற்காக ரூ. 60 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

மேலும், இந்த உதவியை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பும் ரூ. 6000லிருந்து ரூ. 12,000 ஆக உயர்த்தப்பட்டள்ளது.இதன் மூலம் இந்த ஆண்டு முதல் 5150 நலிவடைந்த கலைஞர்கள் மாதம் ரூ. 500 உதவி பெறுவார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+