20 ஆண்டுகளில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம்: கலாம்
காலடி (கேரளா) :
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதை சமாளிக்கவிஞ்ஞானிகள் தயாராக வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3 நாட்கள் சுற்றுப் பயணத்திற்காக கேரளா சென்ற குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், நேற்று ஆதி சங்கரர் பிறந்த இடமானகாலடிக்கு சென்றார். ஆதி சங்கரரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய கலாம் பின்னர் காலடி ஆதி சங்கரா பொறியியல்கல்லூரிக்குச் சென்றார்.கல்லு
அவர் பேசுகையில், ஆதி சங்கரர் இக்கால இளைஞர்களுக்கு முன் மாதிரியாகத் திகழந்தவர்.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் அனைவருக்கும் மின்சாரம் வழங்குதல் என்ற இரண்டு முக்கிய விஷயங்களில் நாம் இப்போதுகவனம் செலுத்த வேண்டும்.
இந்திய மண்ணிலேயே சொந்தமாக செயற்கைக் கோள்களை வடிவமைத்து விண்ணில் செலுத்த வேண்டும் என்ற கனவைடாக்டர் விக்ரம் சாராபாய் கடந்த 1960ம் ஆண்டு இந்திய விஞ்ஞானிகளிடம் ஏற்படுத்தினார். அந்த கனவு தற்போது நிறைவேறிஉள்ளது. இதேபோல், தண்ணீர் மற்றும் மின்சார பற்றாக்குறையை போக்க விஞ்ஞானிகள் கவனம் செ
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சமாளிக்க விஞ்ஞானிகள்அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
மின்சாரம் தயாரிக்க புதிய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். தாதுக்கள் மற்றும் உலோகப் பொருட்களில் இருந்தும்மின்சாரம் தயாரிக்கலாம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை சூரிய ஒளியில் இருந்து பெறமுயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் கலாம்.
இதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கலாம் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி திரும்பினார்.












Click it and Unblock the Notifications