"கும்பகோணம்: 1,200 நர்சரி பள்ளிகளுக்கு மீண்டும் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முறையான அங்கீகாரம் பெறாமல் இயங்கி வந்து, பின்னர் அரசால் மூடப்பட்ட 1200 நர்சரிப் பள்ளிகளுக்கு தமிழக அரசுஅங்கீகாரம் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்துஅடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத பள்ளிக் கூடங்களை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இந்த வசதிகள் இல்லாதவர்கள், முறையான அங்கீகாரம் இல்லாமல் பள்ளியை நடத்துபவர்களுக்கு அரசு காலக்கெடு விதித்து,அதற்குள் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மொத்தம் 40 விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. இவற்றை பூர்த்தி செய்யாத சுமார் 3000 நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன்பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து இப்பள்ளிகளின் நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது. அதேசமயம்,அங்கீகாரம் பெறாத பள்ளிகள் அங்கீகாரம் கோரி அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் அவற்றை அரசு பரிசீலிக்க வேண்டும்என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து அங்கீகாரம் கோரி 3180 பள்ளிகள் விண்ணப்பித்தன. இந்த விண்ணப்பங்கள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுவருகிறது. இதில் இதுவரை 1200 பள்ளிகளின் விண்ணப்பங்கள் திருப்திகரமான வகையில் இருந்ததால் அந்தப் பள்ளிகளுக்குஅங்கீகாரம் வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் இன்னும் 40 சதவீத பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருவதாக அரசு வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பள்ளிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவதாகவும் அரசுத் தரப்பில்கூறப்படுகிறது.

இந்தப் பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெறாமல் தொடர்ந்து இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் கல்வித்துறைமுடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+