தலையில் தேங்காய் உடைக்க பக்தர்களுக்கு அனுமதி
கரூர்:
கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் அம்மன் கோவிலில் தலையில் தேங்காய் உடைத்து திேர்த்திக் கடன் செலுத்த தடையில்லைஎன்று கரூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கரூர் அருகே மேட்டுமகாதானபுரம் அம்மன் கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிமாதம் 19ம் தேதி நடைபெறும் விழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடனை செலுத்துவர்.பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சிலர் குரல் எழுப்பி வந்தனர். இந்நிலையில் தலையில் தேங்காய் உடைப்பது மிகவும் கொடூரமானது. எனவே இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலமனித உரிமை ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடைவிதித்தது.
இதையடுத்து பக்தர்கள் கொந்தளித்தனர். தடையை மீறி தேங்காய் உடைப்போம். இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்குதமிழக அரசே பொறுப்பு என்றும் அவர்கள் எச்சரித்தனர். இதையடுத்து கோவில் நிர்வாகக் குழு, கிராம மக்கள் ஆகியோருடன்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) சனிக்கிழமை பேச்சு நடத்தினார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்படும் தடை விலக்கிக்கொள்ளப்படுவதாகவும், பக்தர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ளவும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதைத் தொடர்ந்து கடந்த 1 மாதமாக இந்தப் பிரச்சினையில் நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications