பஹ்ரைன் விமானத்தில் அல்கொய்தா தீவிரவாதியா? சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை:
சென்னையிலிருந்து இன்று காலை பஹ்ரைன் புறப்பட்ட விமானத்தில் அல் கொய்தா தீவிரவாதி செல்வதாக வந்த தகவலால்சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை சென்னையிலிருந்து பஹ்ரைனுக்கு செல்லும் விமானத்தில் முகமது அலி ஜின்னா என்ற அல் கொய்தா இயக்கதீவிரவாதி செல்வதாக விமான நிலையத்திற்கு ஒரு போன் வந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள், அந்த விமானத்தில் பயணம் செய்பவர்களின் பட்டியலில் முகமதுஅலி ஜின்னா என்ற பெயர் இருக்கிறதா என்று சோதனை செய்தனர். பட்டியலில் அந்தப் பெயர் இருந்ததைப் பார்த்ததும்அதிகாரிகள் மேலும் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக முகமது அலி ஜின்னா என்ற பெயருடைய அந்தப் பயணியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போதுஅவர் திருச்சியை சேர்ந்தவர் என்றும், பஹ்ரைனில் வேலை பார்த்து வந்த அவர், 2 மாத விடுமுறைக்குப் பின்னர் மீண்டும்செல்கிறார் என்றும் தெரியவந்தது.
முகமது அலி ஜின்னாவுக்கு வேண்டாத யாரோ சிலர் இந்த விஷமச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார்தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.