For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கர மட பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கு அங்கீகாரம் ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிகர் நிலைப் பல்கலைக்கழகத்தில்,பொறியியயல்படிப்புக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் சங்கர மடத்திற்குச் சொந்தமான சந்திரசேகரேந்திர சரஸ்வதி நிகர் நிலைப் பல்கலைக்கழகம்உள்ளது.

இங்கு பொறியியல் படிப்புக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் ரத்து செய்து விட்டதாக 2நாட்களுக்கு முன்பு செய்தி பரவியது. இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. பல்கலைக்கழக வளாகத்தில்மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தது. இருப்பினும் பொறியியல்படிப்புகளுக்கான அங்கீகாரத்தை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் ரத்து செய்துள்ளது உண்மை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் பாஸ்கரன் கூறுகையில், நாங்கள் நிகர் நிலைப் பல்கலைக்கழகம். எனவே அகில இந்தியதொழில்நுட்பக் கவுன்சிலின் முடிவுகளுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதை சட்டப்படியாக சந்திப்போம்என்றார்.

சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் சிக்கிய பிறகு படிப்படியாக பல்வேறு சிக்கல்களை சங்கர மடம் சந்தித்து வருகிறது.ஜெயேந்திரர் ராமேஸ்வரம் கோவிலுக்கு சமீபத்தில் சென்றபோது கோவில் கருவறைக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.மேலும் சங்கர மடம் சார்பில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட நன்கொடையையும் கோவில் நிர்வாகம் நிராகரித்து விட்டது.

தற்போது சங்கர மடத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் படிப்புக்கான அங்கீகாரம்ரத்து செய்யப்பட்டுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X