கோவையில் சூறாவளி; டிரான்ஸ்பார்மர் வெடித்தது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை உக்கடம் பகுதியில் இன்று காலை வீசிய திடீர் சூறாவளிக் காற்றில் டிரான்ஸ்பார்மர் வெடித்தது. மினி பஸ்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததில் நூற்றுக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
உக்கடம் பகுதியில் இன்று காலை 10.15 மணிக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதையடுத்து அப்பகுதியே போர்க்களம்போல மாறியது. சூறாவளிக் காற்றுக்கு அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறியது. இதனால் மின்சார விநியோகம்தடைபட்டது.மேலும், சாலையோரம் இருந்த 8 மின்கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்தன. அந்தப் பகுதியில் வந்த 2 மினி பஸ்கள் மீது மின்கம்பங்கள் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்த காரணத்தால்,பஸ்களில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சில நிமிடங்கள் வரை இந்த சூறாவளிக் காற்று வீசியது. இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications