For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனித் தொகுதிகள்: புதிய தமிழகம் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

தனித் தொகுதிகள் தமிழகம் முழுவதும் பரவலாக அமையும் வகையில் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ள வேண்டும்என்று புதிய தமிழகம் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் தொகுதி சீரமைப்புத் தலைவர் டாக்டர் குல்தீப்சிங்கை சந்தித்து புதிய தமிழகம் கட்சியின் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில், மக்கள் தொகை அடிப்படையில், தொகுதிகள் பிரிக்கப்படுவதால் தென் மாவட்டங்கள் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட மாவட்டத்திற்கு ஒரு தொகுதி குறைகிறது.

ஒரு தொகுதிக்குட்பட்ட ஒன்றியங்களைப் பிரிக்கக் கூடாது. ஆனால் ஒட்டப்பிடாரம், வால்பாறை, பாளையங்கோட்டை,ஆலங்குளம், ராஜபாளையம், சாத்தூர், நாமக்கல் ஆகிய ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதேபோல தனித் தொகுதிகளைப் பொருத்தவரை வட மாவட்டங்களில் பெரும்பாலான தனித் தொகுதிகள் வருவது போலமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூருக்கு தெற்கே 20 தொகுதிகளில் ஒரு தொகுதி கூட தனித் தொகுதி இல்லை. மேலும்ஏற்கனவே இருந்த பொள்ளாச்சி, தென்காசி போன்ற தனித் தொகுதிகளை ரத்து செய்து விட்டனர்.

சிதம்பரம், நாகப்பட்டனம், பெரம்பலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், ராசிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 7 தொகுதிகளும் தனித்தொகுதிகளாக அறிவிக்கப்படவுள்ளன. இதை மாற்றி தமிழகம் முழுவதும் பரவலாக தனித் தொகுதிகள் இருக்குமாறுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X