மழை: மும்பை விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது
Subscribe to Oneindia Tamil
மும்பை:
கன மழை காரணமாக மும்பை விமான நிலையம் இன்று காலை 5 மணி முதல் மீண்டும் மூடப்பட்டது.
மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. விமான நிலைய ஓடு பாதையில் வெள்ளம் தேங்கிநின்றதால் கடந்த சில தினங்களுக்கு முன் 2 நாட்கள் விமான நிலையம் மூடப்பட்டது.நேற்று முன் தினம் முதல் விமான நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இந் நிலையில் நேற்று காலை 335பயணிகளுடன் வந்த பெங்களூர் விமானம் தரையிறங்கும் போது ஓடு பாதையில் வழுக்கி சேற்றில் சிக்கிக் கொண்டது. இதில்அதிர்ஷ்டவசமாக 335 பயணிகளும் உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து நேற்று சிறிது நேரம் விமான நிலையம் மூடப்பட்டது. இந் நிலையில் நேற்று முதல் மும்பையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஓடு பாதையில் வெள்ளம் தேங்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று காலை 5 மணி முதல் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டது. இங்கிருந்து புறப்படும் விமானங்கள்அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பைக்கு வரும் விமானங்கள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications