பெண்களை இழிவுபடுத்தும் டாஸ்மாக் அதிகாரிகள்: பாமக கண்டனம்
சென்னை:
சென்னையில் பிரபல வணிக வளாகமான ஸ்பென்சர் பிளாசாவில் திறக்கப்பட்டுள்ள அரசு மதுக் கடையில் ஏராளமானபெண்களும் மது வாங்கி செல்வதாக தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் கூறியிருப்பது கடுமையாககண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் அதிகாரிகள் பெண் குலத்தையே இழிவுபடுத்தி விட்டனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தெருக்கள் தோறும் மதுக்கடைகள்திறக்கப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சிக்கு வந்தபோது 5000 மதுக் கடைகள் இருந்தன. தற்போது இது மூன்று மடங்கு அதிகரித்துவிட்டது.
இந் நிலையில், சென்னை ஸ்பென்சர் பிளாசாவில் உட்கார்ந்து, குடிக்கும் வசதியுடன் (பார்) கூடிய அரசு மதுக் கடைதிறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளும், பெண்களும், வயது முதிர்ந்தவர்களும் அதிகம் வந்து போகும் அந்த இடத்தில்டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டிருப்பது விதிகளுக்குப் புறம்பானது.
இதுதொடர்பாக ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்தப் பத்திரிக்கை சார்பில் டாஸ்மாக் நிறுவனஅதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுமக்கள் இந்தக் கடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சொல்லப்போனால் பெண்களும்இங்கு வந்து மது வாங்கிச் செல்வதாக கூறியிருக்கிறார்கள்.
அந்த அதிகாரிகள் இவ்வாறு கூறியிருப்பது உண்மையானால் அது பெண் குலத்தையே இழிவுபடுத்துவதாகும்.
ஒரு பெண், மாநில முதல்வராக இருக்கும் நிலையில், பொது இடத்தில் உள்ள மதுக் கடைகளுக்கு பெண்கள் வந்து மதுவைவாங்கிச் செல்வதாக கூறியிருப்பது அந்த பெண் முதல்வருக்கும், அவரது ஆட்சிக்கும் சிறப்பல்ல. இதை சாதனை என்று கூறமுடியாது, வேதனையான செய்தி.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசு இதுகுறித்து விளக்கம் கேட்க வேண்டும். ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால்,பாமக மகளிர் அணி சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவர் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.